by Staff Writer 12-07-2019 | 3:36 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 243 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (11) காலை முதல் இன்று காலை 6 மணி வரை நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த 5 ஆம் திகதி சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
அன்று முதல் இன்று காலை 6 மணி வரை மது போதையில் வாகனம் செலுத்திய 2280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இந்த மாதம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.