by Staff Writer 12-07-2019 | 4:25 PM
Colombo (News 1st) தேயிலையின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை தேயிலை ஒரு கிலோவின் விலை தற்போது 80 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக தமது வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கம் தலையிட்டு தேயிலைக்கான நிர்ணய விலையை பெற்றுத்தர வேண்டும் என தேயிலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேயிலை விலை வீழ்ச்சியடைந்தமை தொடர்பில் இலங்கை தேயிலை சபையின் தலைவர் லுசில் விஜேவர்தனவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
தேயிலையின் விலை 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.