by Staff Writer 12-07-2019 | 9:00 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான மத்தியஸ்தர் மற்றும் நடுவர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டி, கிரிக்கெட்டின் தாயகமாகப் போற்றப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுதினம் (14) நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
போட்டிக்கான மத்தியஸ்தர் மற்றும் நடுவர் குழாத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்தது.
போட்டி மத்தியஸ்தராக இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல செயற்படவுள்ளார்.
நடுவர்களாக இலங்கையின் குமார் தர்மசேனவும், தென் ஆபிரிக்காவின் மராயஸ் எராஸ்மஸூம் செயற்படவுள்ளனர்.