இந்திய மீனவர்கள் 6 பேர் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது

by Staff Writer 12-07-2019 | 4:09 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் வசமிருந்த நாட்டுப் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரும் இன்று ஊர்காவற்துரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.