பாகிஸ்தானிய பிரஜை ஒருவர் ஹெரோயினுடன் கைது

by Staff Writer 11-07-2019 | 11:26 AM
Colombo (News 1st) கொள்ளுப்பிட்டியில் பாகிஸ்தானிய பிர​ஜை ஒருவர் 2 கிலோ 85 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தன. சந்தேகநபர் கடந்த 7ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், இங்கிருந்து தென்னாபிரிக்காவுக்கு பயணிப்பதற்குத் திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 48 வயதான பாகிஸ்தானிய பிரஜை இன்று (11ஆம் திகதி) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதன்போது, சந்தேகநபரை 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.