8 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு

வருடத்தின் முதல் காலாண்டில் 8.2 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு

by Staff Writer 11-07-2019 | 2:23 PM
Colombo (News 1st) இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 8.2 மில்லியன் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவர்களில் 47.1 வீதமானோர் சேவைகள் துறையிலும் 28.3 வீதமானோர் உற்பத்தித் துறையிலும் 24.7 வீதமானோர் விவசாயத் துறையிலும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் வேலை வாய்ப்பைப் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.