மக்கள் சக்தியின் 3ஆம் கட்ட செயற்றிட்டத்திற்கான ஆய்வறிக்கை வௌியீடு

by Staff Writer 11-07-2019 | 12:45 PM
Colombo (News 1st) மக்கள் சக்தியின் இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் மூன்றாவது கள ஆய்வு அறிக்கை இன்று (11ஆம் திகதி) வௌியிடப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம், பேராதனை பல்கலைகழகத்துடன் இணைந்து இந்தக் கள ஆய்வை மேற்கொண்டிருந்தது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது மக்கள் சக்தி திட்டத்தின் இல்லங்கள் தோறும் கள ஆய்வு அறிக்கையை பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், பேராசிரியர் உபுல் திசாநாயக்க மற்றும் பேராசிரியர் திலக் பண்டார ஆகியோர், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர். இந்த நிகழ்விற்கு வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் நான்காம் அத்தியாயத்தின் ஆரம்பமும் இன்று நடைபெற்றது.