சுகயீனமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திடீர் சுகயீனமடைந்த பாடசாலை மாணவர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 11-07-2019 | 7:36 AM
Colombo (News 1st) திடீர் சுகயீனமடைந்த சாய்ந்தமருது பாடசாலை ஒன்றின் மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் 21 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாடசாலை உணவகத்தில் நேற்று (10ஆம் திகதி) காலை உணவருந்திய இந்த மாணவர்கள் சுகயீனமுற்றநிலையில் இருந்ததாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். வயிற்றுவலி காரணமாக இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சாய்ந்தமருது வைத்திசாலையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 4,5 மற்றும் 9 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களே திடீர் சுகயீனமுற்ற நிலையில் நேற்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்முனை - சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு சுகயீனமுற்றநிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்