by Staff Writer 11-07-2019 | 4:41 PM
Colombo (News 1st) தமிழக மீனவர்கள் 4 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதவான் ஏ.ஜூட்சன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் 4 பேரையும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினூடாக திருப்பி அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட போது, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.