by Bella Dalima 11-07-2019 | 8:20 PM
Colombo (News 1st) தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுகளில் ஒன்றையேனும் நிரூபித்துக் காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்தார்.
அவ்வாறு ஒரு குற்றச்சாட்டையேனும் அவர்கள் நிரூபித்தால், தாம் அரசியல் வாழ்வில் இருந்து விடைபெறத் தயாராக இருப்பதாகவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.