சுற்றுலாத்துறை வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை

சுற்றுலாத்துறை விரைவில் வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை

by Staff Writer 11-07-2019 | 9:49 AM
Colombo (News 1st) நாட்டின் சுற்றுலாத்துறை விரைவாக வழமைக்குத் திரும்பும் எனவும் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இவ்வாண்டு நாட்டுக்கு வருகை தருவரெனவும் சுற்றுலா அதிகார சபை நம்பிக்கை வௌியிட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்படும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஆதரவு நடவடிக்கைகளின் உறுதுணையுடன் இந்த அடைவு எட்டப்படும் எனவும் குறித்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.