அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

by Bella Dalima 11-07-2019 | 6:44 PM
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் மக்கள் விடுதலை முன்னணியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டிருந்தது. இந்த பிரேரணை தொடர்பில் நேற்றும் இன்றும் சபையில் விவாதங்கள் இடம்பெற்றன. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும், தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.