இரத்தினபுரி, யாழ்ப்பாணத்தில் இலட்சிய வரம் - 2019

இரத்தினபுரி, யாழ்ப்பாணத்தில் இலட்சிய வரம் - 2019 செயற்றிட்டம்

by Staff Writer 10-07-2019 | 7:09 PM
Colombo (News 1st) ஆற்றல்மிகு மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கான இலட்சிய வரம் 2019 செயற்றிட்டம் 8 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. Anchor மற்றும் Champions Network ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. இலட்சிய வரம் - 2019 செயற்றிட்டம் இரத்தினபுரி மற்றும் யாழ். மாவட்டங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஒரு குழுவினர் அவிசாவளையில் இன்றைய பயணத்தை ஆரம்பித்தனர். இன்றைய நிகழ்வு அவிசாவளை புனித மரியாள் வித்தியாலயத்தில் ஆரம்பமானது. மற்றுமொரு குழுவினர் யாழ்பாண மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் தொடர்பில் விழிப்புணர்வை வழங்கினர். இதேவேளை,தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு சென்ற நியூஸ்ஃபெஸ்ட் குழுவினரை மாணவர்கள் சிறப்பாக வரவேற்றனர். அங்கு நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் இலட்சிய வரம் திட்டம் தொடர்பில் தௌிவூட்டியதுடன், மாணவர்களுக்கான விண்ணப்பப் படிவங்களையும் பகிர்ந்தளித்தனர். இதனைத் தொடர்ந்து ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரிக்கு சென்ற நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் மாணவர்களை சந்தித்து அவர்களது எதிர்கால இலட்சியம் தொடர்பில் கேட்டறிந்தனர். வளப்பற்றாக்குறை இருந்தாலும் கல்வியில் சிறந்து விளங்கும் இந்த பாடசாலையில் ஆற்றல்மிகு மாணவர்கள் பலரைக் காணும் வாய்ப்பு நியூஸ்ஃபெஸ்ட் குழுவினருக்குக் கிட்டியது. 12 -18 வயதிற்குட்பட்ட சகல பாடசாலை மாணவர்களும் இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலதிக தகவல்களுக்கு 0777-600 040 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.