ஆடிவேல் சக்திவேல் பவனி இன்று ஆரம்பம்

by Staff Writer 10-07-2019 | 7:51 AM
Colombo (News 1st) முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட திருவேலைத் தாங்கிய, ஆடிவேல் சக்திவேல் பவனி இன்று (10ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளது. அன்னதானக் கந்தன் எனப் போற்றப்படும் யாழ். தொண்டமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து மூன்றாவது வருடமாக ஆடிவேல் சக்திவேல் ரத பவனி இன்று வலம்வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் - தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இன்று ஆரம்பமாகவுள்ள சக்தியின் ஆடிவேல் சக்திவேல் பவனி எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை கெப்பிட்டல் மகாராஜா தலைமையக வளாகத்தை வந்தடையவுள்ளது. கெப்பிட்டல் மகாராஜா தலைமைய வளாகத்தில் ஆடிவேல் சக்திவேல் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டு பின்னர் 13ஆம் திகதி வேல்பெருமானுக்கு விசேட பூசைகள் இடம்பெறவுள்ளன. இதன்போது ஆடிவேல் திருவிழாவினை முன்னிட்டு ஆறுபடை வீடுகளில் ஆசிர்வதிக்கப்பட்ட வேல் பெருமானை தரிசிப்பதற்கான சந்தர்ப்பம் பக்தர்களுக்கும் கிட்டவுள்ளது. இதனையடுத்து எதிர்வரும் 16ஆம் திகதி வேல் பெருமான், கதிர்காமக் கந்தன் ஆலயத்தை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.