அமெரிக்க சட்டத்தரணிகள் சங்க கிளைக்கு அனுமதி இல்லை

அமெரிக்க சட்டத்தரணிகள் சங்க கிளையை இலங்கையில் ஸ்தாபிக்க அனுமதி வழங்கவில்லை: தலதா அத்துகோரல

by Staff Writer 10-07-2019 | 5:27 PM
Colombo (News 1st) அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் கிளை அல்லது அதனுடன் தொடர்புடைய எந்தவொரு நிறுவனத்தையும் இலங்கையில் ஸ்தாபிக்க அனுமதி வழங்கப்படவில்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரால் இந்த விடயம் தொடர்பில் வௌியிடப்பட்ட கருத்து குறித்து பதில் வழங்கும் வகையில் அமைச்சர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். நாட்டு பிரஜை என்ற வகையில், தாய் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் ஜனாதிபதியோ பிரதமரோ தாமோ ஒருபோதும் மேற்கொள்ளப்போவதில்லை என பொறுப்புடன் அறிவிப்பதாகவும் அமைச்சர் தலதா அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.