by Staff Writer 10-07-2019 | 8:43 AM
Colombo (News 1st) வவுணதீவு, அநுராதபுரம், மாவ, பன்னல மற்றும் வாழைச்சேனை ஆகிய இடங்களில் 28 சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
2030ஆம் ஆண்டளவில் தேசிய மின் வலைப்பின்னலில் 60 வீதமான நிலைபெறா எரிசக்தி பரிவர்த்தனைக்காக அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, மின்சக்தி எரிசக்தி வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.