லிட்ரோ கேஸ் நிறுவன வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 8இல்

லிட்ரோ கேஸ் நிறுவனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 8இல்

by Staff Writer 09-07-2019 | 11:21 AM
Colombo (News 1st) லிட்ரோ கேஸ் நிறுவனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலணியின் முன்னாள் அலுவலக தலைமை அதிகாரி காமினி செனவிரத்ன உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுக்களின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.