பனம் பொருட்களின் உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு

பனம் பொருட்களின் உற்பத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு

by Staff Writer 09-07-2019 | 8:08 AM
Colombo (News 1st) பனை உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. பனைசார் உற்பத்தியானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் ஏனைய மாவட்டங்களிலுள்ள மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.