திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 09-07-2019 | 5:57 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு அமுலாகக்கூடும் என, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 02. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிப்பதற்காக 7 பேர் கொண்ட உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. 03. ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 04. இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரல் லலித் ராஜபக்ஸ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 05. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்தி 01. வெனிசூலாவில் தொடரும் அரசியல் பதற்றநிலைமையைத் தணிப்பதற்கு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குத் தயார் என அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. விளையாட்டுச் செய்தி 01. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை குழாம் நாடு திரும்பியுள்ளது.