தாய்வானுக்கான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா அனுமதி

தாய்வானுக்கான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா அனுமதி

by Staff Writer 09-07-2019 | 11:32 AM
Colombo (News 1st) தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க இராஜாங்கத் தி​ணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. 250 ஏவுகணைகள், 108 இராணுவ ட்ரக் வண்டிகள் உள்ளிட்ட 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதங்கள் இவ்வாறு தாய்வானுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன. எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைக்கு சீனா ஏற்கனவே எதிர்ப்பு வௌியிட்டிருந்தது. இந்தத் தீர்மானமானது, ஆபத்து மிக்கதென தாய்வானுக்கான ஆயுத விற்பனையை நிறுத்துமாறு சீன வௌிவிவகார அமைச்சு அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தது.