by Staff Writer 09-07-2019 | 1:39 PM
Colombo (News 1st) மொஹமட் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மௌலவி ஒருவர் குருணாகல் - ரஸ்நாயக்கபுர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பிளெக்பூல் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் குறித்த சந்தேகநபர் சஹ்ரானின் குழுவில் பயிற்சிகளை பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று சந்தேகநபரைத் தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.