சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய, மேல், வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

by Staff Writer 09-07-2019 | 4:56 PM
Colombo (News 1st) சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறையிலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது சில பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை, மன்னார் தொடக்கம் கொழும்பு வரையான கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 70-80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடல்சார் தொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.