கொக்குவில் பகுதியிலுள்ள வீடுகள் மீது தாக்குதல்

கொக்குவில் பகுதியிலுள்ள வீடுகள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

by Staff Writer 09-07-2019 | 8:14 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியிலுள்ள வீடுகள் சிலவற்றின் மீது இனந்தெரியாத சிலர் நேற்று (08) தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கொக்குவில் - பிடாரி அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள மூன்று வீடுகளுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாத சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இதன்போது வீடுகளின் கதவுகள், ஜன்னல் மற்றும் தளபாடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.