கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்துகொண்ட கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள்

by Staff Writer 09-07-2019 | 8:07 PM
Colombo (News 1st) தோட்டத்தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரும் கறுப்பு பட்டி அணிந்து தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமைக்கு தமது எதிர்ப்பினை வௌியிட்டனர். இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் கருத்து தெரிவிக்க முற்பட்ட போது சபையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.