கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானம் புறப்படுகிறது

கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்ட விமானம் இன்று புறப்படுகிறது

by Staff Writer 09-07-2019 | 7:57 AM
Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட, நிலத்தடியைக் கண்காணிப்பது உள்ளிட்ட விசேட செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம் இன்று (9ஆம் திகதி) நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளது. குறித்த விமானம் இன்று மும்பையை நோக்கி புறப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் எயார் Z-S-A-S-N ரகத்திற்குரிய Basler BT-67 என்ற விமானம் கடந்த சனிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி சுமார் 1000 மீற்றர் ஆழத்தில் நிலத்திற்கடியில் உள்ளவற்றை கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனசியாவில் இருந்து இந்த விமானம் நாட்டை வந்தடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.