by Staff Writer 09-07-2019 | 2:07 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்ட ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சாட்சியமளிப்பதற்கு நேற்று சென்றிருந்த வேளை சமரவீர கைது செய்யப்பட்டார்.
அவன்காட் விசாரணை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவன்காட் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் பெயரிடப்பட்டுள்ள குற்றவாளிகளுள் 8ஆவது குற்றவாளியாக விக்டர் சமரவீர பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.