ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

by Staff Writer 08-07-2019 | 4:51 PM
Colombo (News 1st) ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவன்காட் தொடர்பிலான விசாரணைகளின் பொருட்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அவன்காட் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளோரில் எட்டாவது சந்தேகநபர் விக்டர் சமரவீர என்பது குறிப்பிடத்தக்கது.