by Staff Writer 08-07-2019 | 9:23 PM
Colombo (News 1st) களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (9ஆம் திகதி) காலை 10 மணி முதல் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை வாதுவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு மற்றும் கட்டுகுருந்த, நாகொட உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
களுத்துறை அல்விஸ் பிராந்திய நீர்த்தேக்கத்தில் இடம்பெறும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.