by Staff Writer 08-07-2019 | 3:00 PM
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது இந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், காணி தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம் தொடர்பில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.