மொரகஹகந்த மீன்வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை

மொரகஹகந்த மீன்வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை

by Staff Writer 07-07-2019 | 11:54 AM
Colombo (News 1st) மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் முன்னெடுக்கப்படும் மீன்வளர்ப்பை மேம்படுத்துவதற்கு இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நீர்த்தேக்கத்தில் 5 இலட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், சந்தையில் மீனுக்கான கேள்வியை அதிகரித்தல் என்பன இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என, இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.