நாட்டின் சில பகுதிகளில் அதிக வெப்பம்

நாட்டின் சில பகுதிகளில் அதிக வெப்பம்

by Staff Writer 07-07-2019 | 7:57 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (7ஆம் திகதி) அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து, குறித்த பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. அதிக வெப்பம் நிலவும் சந்தர்ப்பங்களில் அதிகமாக நீரை அருந்துமாறும் நிழலான இடங்களில் இளைப்பாறுதல், வௌிர்நிற ஆடைகளை அணிய வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.