by Staff Writer 07-07-2019 | 12:00 PM
Colombo (News 1st) இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருப்பதற்கு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறான கட்சிகள் உருவாக்கப்படுவதால், அரசியல், சமூகம் மற்றும் மத ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.