காங்கேசன்துறை கடற்பகுதியில் பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு

by Staff Writer 06-07-2019 | 7:23 PM
Colombo (News 1st) இலங்கை பெறுமதிமிக்க வளங்களைக் கொண்ட ஒரு நாடு. நாட்டின் சில பகுதிகளிலுள்ள முக்கியமான, பெறுமதியான வளங்களை இன்னமும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றோம். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடற்பகுதியில் புதிய வகையான பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும். இந்த புதிய பவளப்பாறை 400 மீட்டர் நீளத்தைக் கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடல் வளத்திற்கான பல்வேறு அத்தியாவசிய பிரிவுகளை இது கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதுடன், பவளப்பாறையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். காங்கேசன்துறை கடற்பிரதேசத்தில் கடற்படையின் சுழியோடி குழுவொன்றினால் கடந்த வாரம் முழுவதும் ஆழ்கடல் ஆய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தபோது இப்பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது.

ஏனைய செய்திகள்