வழமைக்குத் திரும்பும் சுற்றுலாத்துறை

வழமைக்குத் திரும்பும் சுற்றுலாத்துறை

by Staff Writer 05-07-2019 | 4:31 PM
Colombo (News 1st) நாட்டின் சுற்றுலாத்துறை வழமைக்குத் திரும்புவதாக துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட விரைவாகவும் உறுதியாகவும் சுற்றுலாத்துறை முன்னேற்றம் காணுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தின் பின்னர் கடந்த ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரட்டிப்பாகியதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 57 வீத வீழ்ச்சியாகப் பதிவாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 21 இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.