மரண தண்டனை நிறைவேற்றுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 05-07-2019 | 3:24 PM
Colombo (News 1st)  மரண தண்டனை நிறைவேற்றுவதை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, காமினி அமரசேகர மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.