போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு: நால்வர் கைது

மட்டக்களப்பில் போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த சம்பவம்: நால்வர் கைது

by Staff Writer 05-07-2019 | 4:13 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - புதூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 வயதான இருவர், 23, 55 வயதுடையவர்கள் இருவர் என நால்வர் நேற்றிரவு (04) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை போக்குவரத்து பொலிஸார் நேற்று தடுத்த போதிலும் கட்டளையை மீறி பயணித்தவர்கள் கீழே வீழ்ந்து விபத்திற்குள்ளாகினர். இதன்போது, கிராம மக்கள் சிலரால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதன்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கும் திருடப்பட்ட கைத்துப்பாக்கியைத் தேடியும் பொலிஸார் ​மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.