போதைப்பொருள் குறித்த தகவல்களுக்கு தொலைபேசி இலக்கம்

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை 1984 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரிக்கை

by Staff Writer 05-07-2019 | 3:50 PM
Colombo (News 1st) ​போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை 1984 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் விசேட நடவடிக்கை பிரிவில் சேவையாற்றிய அதிகாரிகள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுடன் இணைந்து தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையில் நிறுவியுள்ள போதைப்பொருள் நடவடிக்கை பிரிவுடன் இணைந்த வகையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 1984 என்ற இலக்கத்திற்கு அழைத்து போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.