by Staff Writer 05-07-2019 | 3:41 PM
Colombo (News 1st) கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கணினி கட்டமைப்பை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.
இதற்காக விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.