தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்

தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

by Staff Writer 05-07-2019 | 3:41 PM
Colombo (News 1st) கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு நாள் சேவையின் கீழ் ​தேசிய அடையாள அட்டை விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கணினி கட்டமைப்பை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார். இதற்காக விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.