துனிசியாவில் படகு விபத்து:80க்கும் மேற்பட்டோர் பலி

துனிசியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 80-க்கும் மேற்பட்டோர் பலி

by Bella Dalima 05-07-2019 | 5:05 PM
துனிசியா நாட்டில் புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி படகில் பயணம் செய்துள்ளனர். அந்த படகில் 80-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். துனிசியா கடற்பகுதியில் நேற்று முன்தினம் (03) இரவு சென்றபோது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதிக எடையால் படகு திடீரென கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த மீனவர்கள் சிலர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீரில் மூழ்கியவர்களில் 4 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். எனினும், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலியாகி இருக்கக்கூடும் என ஐ.நா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.