by Staff Writer 04-07-2019 | 12:08 PM
Colombo (News 1st) ரயில் ஊழியர்கள் நேற்று (3ஆம் திகதி) இரவு முதல் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக மேலதிகமாக 250 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் மேலதிகமாக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.