மட்டக்களப்பில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த இருவர் கைது

by Staff Writer 04-07-2019 | 3:31 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - புதூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதிப்பத்திரமின்றி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களை கைது செய்த போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கீழே வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது, கிராம மக்கள் சிலரால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.