குருணாகல் வைத்தியசாலையில் முதல்தடவையாக அவயவங்களைப் பொருத்தும் சத்திரசிகிச்சை வெற்றி

by Staff Writer 04-07-2019 | 2:11 PM
Colombo (News 1st) குருணாகல் போதனா வைத்தியசாலையில் முதல்தடவையாக அவயவங்களைப் பொருத்தும் சத்திரசிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. மூளைச்சாவடைந்த 9 வயது சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் 35 வயதான ஒருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளன. அவயவங்களைப் பெற்றுக் கொள்வதும் மற்றும் பொருத்தும் நடவடிக்கைகளும் ஒரே சத்திரசிகிச்சைப் பிரிவில் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.