கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 04-07-2019 | 11:59 AM
Colombo (News 1st) கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (4ஆம் திகதி) அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தாவில் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி ஒன்றும் எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் இரு வாகனங்களின் சாரதிகளும் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த 32 வயதான ஒருவரும் மட்டக்களப்பைச் சேர்ந்த 40 வயதான ஒருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.