மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளாத வட மாகாண ஆளுநர்

மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளாத வட மாகாண ஆளுநர்: ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்

by Staff Writer 03-07-2019 | 10:00 PM
Colombo (News 1st) வட மாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பு மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநரை சந்திப்பதற்காக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர். குறித்த மக்கள் சந்திப்பிற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் திணைக்கள தலைவர்களும் வருகை தந்திருந்த போதும் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் சமூகமளிக்கவில்லை. இதன் காரணமாக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்த பொதுமக்களும் தொண்டர் ஆசிரியர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.