பூஜித், ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் அறிக்கை

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் அறிக்கை

by Staff Writer 03-07-2019 | 7:38 AM
Colombo (News 1st) தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் இன்று (3ஆம் திகதி) மீண்டும் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்படவுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய வைத்தியசாலைக்கும் பூஜித் ஜயசுந்தர அனுமதிக்கப்பட்டுள்ள நாரஹேன்பிட்ட வைத்தியசாலைக்கும் சென்ற கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, இன்று வரை விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்திருந்தார். சந்தேகநபர்கள், சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் வைத்தியசாலைகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நேற்று பிற்பகல் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்