by Bella Dalima 03-07-2019 | 9:33 PM
Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர விசேட செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் திறமையாளர்கள் இருப்பதனால், வெளியில் உள்ள வியாபாரிகள் கட்சிக்கு தேவையில்லை எனவும் நாட்டிற்கு தலைமைத்துவம் வழங்க முடியுமான தலைவர்கள் கட்சியில் உள்ளதாகவும் அச்செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
24 வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் இருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள மங்கள சமரவீர, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளதாகக் கூறியுள்ளார்.
நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி இருந்தாலும் கட்சிக்கு கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.