இளைஞர்கள் கொலை வழக்கில் STF உறுப்பினர்கள் விடுதலை

திருகோணமலை இளைஞர்கள் கொலை வழக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விடுதலை

by Staff Writer 03-07-2019 | 1:47 PM
Colombo (News 1st) திருகோணமலை கடற்கரையில் 5 இளைஞர்களை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 13 உறுப்பினர்களும் இன்று (3ஆம் திகதி) விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை பிரதம நீதவான் M.H.M. ஹம்சாவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகளுக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமானளவு சாட்சியங்கள் இல்லாதமையால் அவர்கள் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் 5 இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.