வௌியிட்ட கருத்து குறித்து ஹிஸ்புல்லா வாக்குமூலம்

திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவில் ஹிஸ்புல்லா ஆஜர்

by Staff Writer 03-07-2019 | 3:49 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவில் இன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். அவரால் ஏற்கனவே வௌியிடப்பட்ட கருத்து தொடர்பிலேயே இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவில் இன்று ஆஜராகுமாறு ஏற்கனவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, இன்று முற்பகல் 10 மணியளவில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவில் ஆஜராகியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.