ஐ.நா. அமைதிப்படைக்கான இலங்கை குழாம் பயணம்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் இணைவதற்கான இலங்கை குழாம் தென் சூடான் பயணம்

by Staff Writer 03-07-2019 | 12:09 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் கடமையில் ஈடுபடுவதற்காக 61 பேர் கொண்ட இராணுவ குழாம் இன்று (3ஆம் திகதி) அதிகாலை தென் சூடான் நோக்கி பயணித்துள்ளது. 11 இராணுவ உயரதிகாரிகளைக் கொண்ட குறித்த குழுவினரில் இராணுவத்தினரின் மருத்துவ பிரிவினரும் அடங்குகின்றனர். நாட்டிலிருந்து தென் சூடானுக்கு பயணிக்கும் ஆறாவது குழுவாக இவர்கள் காணப்படுவதுடன், அவர்கள் அங்கு ஒரு வருடத்திற்கு சேவையாற்றவுள்ளனர். இந்தக் குழுவினர் சூடனை சென்றடைந்ததும், அங்கு தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள 66 படை உறுப்பினரைக் கொண்ட குழு இலங்கைக்கு மீள வருகை தரவுள்ளது.