இலட்சிய வரம் செயற்றிட்டத்தின் இரண்டாம் நாள் இன்று

by Staff Writer 03-07-2019 | 1:54 PM
Colombo (News 1st) சம்பியன்ஸ் நெட்வேர்க் ஏற்பாடு செய்துள்ள நாட்டின் பாடசாலை மாணவர்களின் திறமைகளுக்கு மகுடம் சூட்டும் இலட்சிய வரம் 2019 செயற்றிட்ட நிகழ்வு இன்று (3ஆம் திகதி) சியம்பாலாண்டுவ பகுதியில் ஆரம்பமாகியது. ''இலட்சிய வரம் - ஆற்றல்களின் சந்ததிக்கான மகுடம்'' புலமைப்பரிசில் செயற்றிட்டப் பயணம் நேற்று (2ஆம் திகதி) கதிர்காமத்தில் பயணத்தை ஆரம்பித்தது. அங்கர் மற்றும் சம்பியன்ஸ் நெட்வேர்க் ஆகியன ஒன்றிணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. எதிர்காலம் குறித்த கனவுடன் காத்திருக்கும் பிள்ளைகளை, வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.